அப்பம் தின்ற முயல்
அது ஒரு மலைக்காடு ஒரு பெரிய மலை. அதன் சரிவுகளில் பெரிய பெரிய மரங்கள் வளர்ந்து காடாய் மண்டி போய் கிடந்தது. அந்த மலைக்காட்டில் ஒரு முயல் இருந்தது. ஒரு நாள் அந்த குட்டி மையல் காட்டுக்குள்ளே அங்கும் இங்குமாக துள்ளி பாய்ந்து குதித்துக் கும்மாளம் போட்டது. பாய்ந்து பாய்ந்து ஓடிக் கொண்டிருந்த அந்த குட்டி முயலுக்குத் திடீரென ஓர் ஆசை தோன்றியது. மலை உச்சி வரை போய்ப்பார்த்து விடவேண்டும் என்பது தன அந்த ஆசை. உடனே அது உச்சி நோக்கி பாய்ந்து செல்ல தொடங்கியது. மரங்களுக்கிடையே புல்வெளிகளிலே குறுக்கும் நெடுக்குமாக வளர்ந்திருந்த செடிகளையும், கொடிகளையும், புதர்களையும் தாண்டிக் குதித்து மேலே மேலே சென்று கொண்டிருந்தது. போக போக மலை உச்சி நெருங்கி வருவதாகத் தெரியவில்லை. மலை அவ்வளவு உயரமாக இருந்தது. குட்டி முயல் நினைத்த செயலை முடிக்காமல் தூங்காது போல் இருந்தது. சிறிது கூட அயராது அது துள்ளி பாய்ந்து சென்று கொண்டிருந்தது. அது உச்சி சென்று சேர்ந்த நேரம் இருட்டி விட்டது. உச்சியில் நின்று அந்த குட்டி முயல் சுற்று முற்றும் பார்த்தது மலையடிவாரத்தில் இருந்த பெரிய பெரிய மரங்களெல்லாம் சின்ன சின்ன செடிகள் போல் காட்சிய...