கண் கண்ட கணவன் ஏண்டி அழகேஸ்வரி அந்த மாப்பிளையை தான் வேணும்னு அடம் பிடிக்குற ?உனக்கு இந்த ஊர்ல வேற யாருமேயில்லையா? அவன் நல்வாவா இருக்கான்? ஏன் டீ இப்படி பண்ற? முடியாதும்மா கட்டுனா அவனை தான் கட்டுவேன், உன்னால கல்யாணம் பண்ணி வைக்க முடியுமா? முடியாதா ? ஏம்மா உனக்கும் அவனுக்கும் பொருத்தமே இல்லையேடி! அடியே! அவன் புள்ளையார் மாதிரி இல்ல! இல்ல புள்ளையார் கூட தோத்துவிடுவார் அப்படி இருக்கான்! அவனை போய் என்னனு சொல்ல தெரியல! நீ எப்படி இருக்க பேருக்கு ஏத்த மாதுரி லட்சணமா, நம்ம ஆத்துல அவன யாருக்குமே பிடிக்கலடி சொன்ன கேளுடி. ஆத்துல யாருக்குமே பிடிக்க வேண்டாம் எனக்கு பிடிச்ச போதும் ,நாளைக்கு அவா வீட்டுல இருந்து வருவாங்க சம்மதம் சொல்லு இல்ல னா என்ன உயிரோட பாக்க மாட்ட! ...